Monday, November 27, 2006

யோகமும் வாழ்க்கையும்!

யோகம் என்பது பேரானந்தம், சமாதி, தன்னைக் கடந்து செல்வதற்கான வழி என்று பல ஞானிகள்பல்வேறு விளக்கங்களைச் சொல்லியுள்ளனர். சமாதி என்பது சமம் + ஆதி அதாவது இறைநிலைக்குச்சமம் என்பது பொருளாகிறது. சமண,பெளத்த, இந்து மரபுகளில் யோக வளர்ச்சி அளப்பற்கரியது.பல்வேறு வகையான யோக நெறிகள் உலகம் முழுதும் வழக்கில் உள்ளன. மொத்தத்தில் உடல் நலத்துக்கும், மன வள்த்துக்கும் யோக முறையைப் பின்பற்றுவது மிகவும் அதிகரித்துள்ளது.

மதங்களைச் சார்ந்தும், ஞானிகளைச் சார்ந்தும் பல யோக முறைகள் மக்களுக்கு பெரும் நன்மையைஅளித்து வருகின்றன. யோகமுறை என்பது நடைமுறைப் பயிற்சியாகும். இதை தானாகவோ, நூல்கள் மூலமாகவோ கற்றுக்கொள்வது வெற்றியைத் தராது. குருவின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளே வெற்றி அளிக்கும். குருஎன்பதன் பொருள் இருளை நீக்குபவர் என்பதாகும். தீட்சை அளித்து ஒரு குறிப்பிட்ட யோகநெறியில் ஈடுபடுத்தவும், வழிகாட்டும் பொறுப்பினையும் குரு ஏற்கிறார்.

மனிதனின் ஆன்மீகப்பயணத்தில் குருவின் பணி மிக உயர்வானது. குருவானவர் ஆத்மாவை, பேருண்மையை உண்ர்ந்த, உண்ர்த்தும் வல்லமை படைத்தவராகிறார். இன்று விஞ்ஞானம் மிக உயரிய நிலையில் மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றது. எல்லாவிதவளங்களும் இருப்பினும், பெரும்பாலான மக்கள் மன அமைதியின்றி இருக்கின்றனர்.

ஆன்மீகவளர்ச்சியும் சரியான நிலையில் சென்று கொண்டிருக்கிறதா? என்பதும் கேள்விக்குறி. வேதங்களும்,எல்லா மதங்களும், சமயங்களும் அன்பையே போதிக்கின்றன. உலகம் முழுவதும் போர், பிணக்கு, அமைதியின்மையையே காண்கிறோம். எனவே, இன்னும் அடிப்படையில் உள்ள குளறுபடிகளைஇன்னும் நீக்கியபாடில்லை என்பது வெளிச்சம். உலகம் முழுவதும் போரின்றி அமைதி பெறவேண்டும் என்று ஞானிகள், மகான்கள், சில தலைவர்கள் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருந்தாலும்பெரும் தலைவர்கள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பெரும் வியாபாரிகள் இதற்குமுட்டுக்கட்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனது நாடு, மொழி, மதம், இன சுய நலத்திற்காகத் தொடர்ந்து உலக அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியானால் இதற்கு முடிவே இல்லையா? என்றால் நிச்சயம் உண்டு. இது ஒரு நீண்ட பயணம். தனி மனித அமைதி, குடும்ப அமைதி, ஊர் அமைதி, உலக அமைதி என்ற முறையில் ஞானிகள்வழிவகுத்துச் சென்றுள்ளனர். இதற்கு யோகநெறி வழி காட்டுகிறது. அவற்றினை முறையாக அறிந்துசெயல்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.


தனிமனித ஒழுக்கம், விளைவறிந்த விழிப்பு நிலை, செயலுக்கேற்றவிளைவு; என்ற அறிவு நிலைக்கு மக்களை மாற்றும் அறிவினை யோக ஆன்மீக வாழ்வு அளிக்கிறது.இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதற்கான கல்வி முறைகள் மட்டுமே வழக்கத்தில்உள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒழுக்க நெறி பற்றியோ உடல் நலம் குறித்தோ கல்வித் திட்டம்இல்லை. அது பற்றி பொறுப்பிலுள்ளவர்களும், மக்களும் கவலைப்படவில்லை.

இன்றைய காலத்தில் மக்களுக்கு எல்லா வசதிகளும் இருந்தாலும், பெரும்பாலான குடும்பங்களில் அமைதியில்லை. உடல் நலம், மனநலமின்றி துன்பமடைகின்றனர். குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னர், உடல் நலம் கெடும்போதுஅந்த வேளையில் ஏதாவது ஒரு ஆன்மீக இயக்கத்தினைத் தேடி அதில் இணைந்து முடிந்த வரைதங்களைக் காத்துக்கொள்கின்றனர். பெரும்பாலான ஆன்மீக இயக்கங்களில் அதனால்தான் வயதானவர்-களையே பார்க்கிறோம். யோகம், தியானம் இவைகளை இளைஞர்கள் தங்களுக்குத் தேவையற்றதுஎன்றும் அது வயதானவர்களுக்கானது என்றும் தவறாக எண்ணுகின்றனர். இது முழுமையான பக்திமார்க்கம் என்று பலர் ஒதுங்கிச் செல்கின்றனர். உண்மையான ஆன்மீகத்திற்கும், பக்திக்கும் நிறையவேறுபாடு உண்டு. எனவே 14 வயதுக்கு வந்த அனைத்து மனிதர்களும், எவ்வித வேறுபாடின்றி முழுமையானயோகக் கலையினை கற்றுக்கொண்டு வாழ்நாள் முழுதும் இன்பமாக வாழமுடியும் என்று அருட்தந்தைவேதாத்திரி மகரிஷி கூறுகிறார். வாழ்வின் துன்பத்திலிருந்து மீண்டு பேரின்ப வாழ்க்கையை நடத்தயோகக் கலையை அனைவருக்கும் பயிற்றுவிக்கவேண்டும்.

யோகத்தின் அடிப்படைக் கூறுகள்:

உண்மைகளை அறிதற்கு உறுதுணையாயிருக்கும் கலைதான் யோகம். மெய்ப்பொருளைஅறிவதற்கான வழியை இது காட்டுகிறது. மனதின் இயல்புகளைச் சரியாகப் பார்ப்பதற்கான தெளிவினைஇக்கலை கொடுத்துதவுகிறது. மனதை அளப்பதற்கு மனதே கருவியாகும். மனதை உள்முகமாகத் திருப்பவேண்டும். தேவையற்ற விவகாரங்களில் போகவிடாமல் தடுக்கவேண்டும். அதன் ஆற்றல்கள் யாவும் ஒன்று கூடும்படி செய்யவேண்டும். மனதின் இயல்பு குறித்த அறிவு வருகிறது. தன்னைத் தானேஅகத்தாய்வு செய்துகொள்ளும் ஆற்றல் பெருகுகிறது. மனிதன் பெறும் பேறுகளில் ஞானமே தலைசிறந்தது. ஞானத்தைப் பெறுவதற்கான வழி மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதைத் திரட்டி ஒருமுகப்படுத்துவது என்பதையே யோகம் விளக்குகிறது. நமது துன்பங்களை அகற்றிவிடும். அகத்தில்இருக்கும் சக்திகளை கையாளக் கற்றுக் கொள்ளும் மனிதன் இயற்கை முழுவதையும் தன்வசத்தில்கொண்டு வர முடியும். யோகம் வெறும் செவிக்கு உணவல்ல செயலுக்குரியது.

1 comment:

Arun said...

குரு வாழ்க! குருவே துணை!

இது ஒரு நல்ல பணி - தொடர்ந்து எழுதுங்கள். படிக்கிறோம்.

என் பெயர் அருண்; பொறியியல் துறையை சார்ந்த படிப்பு மற்றும் வேலை. சுவாமிஜியின் கருத்துக்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. இப்பொழுது தான் ஆசிரிய பயிற்றிசி முடித்து உள்ளேன். வான் காந்தம் மற்றும் ஜீவ காந்த அறிவியலில் சற்று ஆர்வம் அதிகம் . இவ்வளவு அறிமுகம் போதும் அல்லவா?

Vaazhga Valamudan!